செய்திகள் :

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

post image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் பெண் கோபித்துக்கொண்டு நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

டிசம்பர் 2ஆம் தேதி இரவு இசக்கிபாண்டி தனது நண்பருடன், நெட்டூரில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவர் வர மறுக்கவே, மதுபோதையிலிருந்த இருவரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில், இரவுப் பணியிலிருந்த கடங்கநேரிப் பகுதியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முருகன், ஒரு பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிபாண்டியைக் கண்டித்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனர்.

காவலருக்கு அருவாள் வெட்டு
காவலருக்கு அருவாள் வெட்டு

எனினும், ஆத்திரத்திலிருந்த இசக்கிபாண்டி, தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் மீண்டும் நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகனை, அந்தக் கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது.

உடனே அவர் துப்பாக்கியை எடுக்கவே, அந்தக் கும்பல் சுதாரித்துக்கொண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவத்தை அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் முருகனை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமைக் காவலர் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற இசக்கிபாண்டி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க