செய்திகள் :

பாமக: "மாம்பழம் சின்னத்தை முடக்காமல் இருக்க, தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன" - திலகபாமா

post image

'பா.ம.க கட்சியையும், சின்னத்தையும் முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது' என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில பொருளாளர் திலகபாமா பேசியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில், "ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இது பா.ம.க சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

பா.ம.க கட்சியையும், சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல் அறநிலையத்துறையை யார் இன்று முடுக்கி விட்டார்கள்.

பாமக மாநில பொருளாளர் திலகபாமா
திலகபாமா

இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க-வின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

கட்சியை அடுத்த தலைமுறைக்குப் பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையைக் காப்பதற்கும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பல்வேறு கட்ட முயற்... மேலும் பார்க்க

"முதல்வரின் மக்கள் செல்வாக்கை குறைக்க பல வழிகளில் நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு" - உதயநிதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது, ``திர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க