செய்திகள் :

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

post image

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

சரியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து, டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற குரல்கள் கர்நாடகாவில் எழத் தொடங்கின.

அந்தக் குரல்களை 'தலைமை முடிவு செய்யும்' என்கிற ஒற்றைப் பதிலால் கடந்து சென்றார் சித்தராமையா. இதில் டி.கே.சிவக்குமாருக்கு உடன்பாடில்லை என்றாலும், அவரும் இதே பதிலைத் தான் கூறி வந்தார்.

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்
சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் 'கர்நாடகா முதல்வர் யார்?' என்கிற தொடர் சந்திப்புகளும், கூட்டங்களும் நடந்துகொண்டே இருந்தன.

அதன் முடிவில், சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி, இன்று அவரது வீட்டில் நடந்த காலை விருந்திற்குப் பிறகு தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள சித்தராமையாவிற்கு ராஜ்ய சபா சீட்டும், அவரது மகனுக்கு மாநிலத்தில் அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்... மேலும் பார்க்க

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி ம... மேலும் பார்க்க

`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்

நெருக்குதலில் மகிழ்ச்சி மாண்புமிகு!வாரியம் கேட்கும் நிர்வாகிகள்...த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்க... மேலும் பார்க்க

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க