செய்திகள் :

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

post image

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி மறு ஆய்வு செய்து வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியா நகராட்சி தலைவர் தீபன்கர் பட்டாச்சாரியா வீட்டில் இருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திபன்கர் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியதில் அவரது வீட்டில் இருந்து ரூ.80 லட்சம் மற்றும் அரசு நிவாரண பணிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் தார்ப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தீபன்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பணத்தை பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அவரது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பண்ணை வீட்டிற்கு வெளியில் ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில்தான் பணத்தை புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் அந்த இடத்தை தோண்டினர். நீண்ட நேர தோண்டுதலுக்கு பிறகு சாக்குமூட்டைகள், டிராலி பேக்கள் உள்ளே புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுவதும் பணம் இருந்தது. அனைத்துமே 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். சாக்கு மூட்டைகள் மற்றும் டிராலி பேக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவை அனைத்தும் தண்ணீர் புகாத அளவுக்கு மிகவும் இறுக்கமாக மூடப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. சில சாக்குமூட்டையில் சொத்து ஆவணங்களும் இருந்தது. அனைத்தையும் தோண்டி எடுக்க பல மணி நேரம் பிடித்தது. பணத்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்று எண்ணிப்பார்த்தபோது 2.24 கோடி இருந்தது தெரிய வந்தது.

வேறு எங்காவது பணம் அல்லது பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ட்ரோன் மூலம் பட்டாச்சாரியாவின் பண்ணை வீடு முழுக்க ஆய்வு செய்யப்பட்டது. பட்டாச்சாரியாவின் உதவியாளர் சமீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுகள் மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம்: ஃப்ளக்ஸ் வைப்பதில் வாக்குவாதம் - தவெகவினர் தாக்கியதில் காவலருக்கு கையில் எலும்பு முறிவு!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், காளி. இருவரும் தவெக-வில் வார்டு உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றி பெற்ற வினோத் அமைச்சராகியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் வின... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்... மேலும் பார்க்க

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்க... மேலும் பார்க்க

`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்

நெருக்குதலில் மகிழ்ச்சி மாண்புமிகு!வாரியம் கேட்கும் நிர்வாகிகள்...த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்க... மேலும் பார்க்க

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க