செய்திகள் :

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

post image

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி மறு ஆய்வு செய்து வருகிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியா நகராட்சி தலைவர் தீபன்கர் பட்டாச்சாரியா வீட்டில் இருந்து ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திபன்கர் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியதில் அவரது வீட்டில் இருந்து ரூ.80 லட்சம் மற்றும் அரசு நிவாரண பணிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் தார்ப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தீபன்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பணத்தை பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அவரது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பண்ணை வீட்டிற்கு வெளியில் ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில்தான் பணத்தை புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் அந்த இடத்தை தோண்டினர். நீண்ட நேர தோண்டுதலுக்கு பிறகு சாக்குமூட்டைகள், டிராலி பேக்கள் உள்ளே புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் முழுவதும் பணம் இருந்தது. அனைத்துமே 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். சாக்கு மூட்டைகள் மற்றும் டிராலி பேக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவை அனைத்தும் தண்ணீர் புகாத அளவுக்கு மிகவும் இறுக்கமாக மூடப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. சில சாக்குமூட்டையில் சொத்து ஆவணங்களும் இருந்தது. அனைத்தையும் தோண்டி எடுக்க பல மணி நேரம் பிடித்தது. பணத்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்று எண்ணிப்பார்த்தபோது 2.24 கோடி இருந்தது தெரிய வந்தது.

வேறு எங்காவது பணம் அல்லது பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ட்ரோன் மூலம் பட்டாச்சாரியாவின் பண்ணை வீடு முழுக்க ஆய்வு செய்யப்பட்டது. பட்டாச்சாரியாவின் உதவியாளர் சமீம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுகள் மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க