செய்திகள் :

`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28).

ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடுத்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக் வாங்கி கொடுத்தனர் பெற்றோர்.

இதற்கிடையே அக்டோபர் மாதம் 21-ம் தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஆடம்பர பைக்குகள் வாங்கித்தரவேண்டும் என ஹிருத்திக் பெற்றோருக்கு தொல்லை கொடுத்துவந்தார்.

ஹிருத்திக்
ஆடம்பர பைக் கேட்டதால் தந்தையால் கொலை செய்யப்பட்ட ஹிருத்திக்

கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி ஆடம்பர பைக் கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அரிவாளால் தந்தையை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குழி தோண்ட பயன்படுத்தும் கம்பியால் தனது மகனின் தலையில் பலமாக அடித்தார் வினயானந்த்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கிய ஹிருத்திக்கை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் தந்தை வினயானந்த்.

பின்னர் மகனை தாக்கியதாககூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார் வினயானந்த். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆடம்பர பைக் கேட்டு ஹிருத்திக் அவ்வப்போது பெற்றோரை தாக்கிவந்ததைத் தொடர்ந்தே தந்தை கம்பியால் அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஹிருத்திக்
ஹிருத்திக்

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துவந்த ஹிருத்திக் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதையடுத்து தந்தை மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ஆடம்பர பைக் கேட்டு அடம்பிடித்த மகனை தந்தையே அடித்து கொலைசெய்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க