செய்திகள் :

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

post image

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது.

பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக கணக்கு காட்டியதைக் கேட்டு முதியவர் அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ்வர் மிஸ்ராவிற்கு முதியோருக்கான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்காக காமேஷ்வர் பொதுச் சேவை மையத்திற்குச் (CSC) சென்றார்.

அவர் தனது ஓய்வூதியத் தொகையை எடுத்த பிறகு தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவரது வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார். காமேஷ்வருடன் அவரது மாற்றுத்திறனாளி மகனும் சென்று இருந்தார்.

அவரது மகன் வங்கிக்கணக்கிலும் இதே போன்று அதிக தொகை இருப்பதாகக் காட்டியது. இருவரது வங்கிக்கணக்கிலும் சேர்த்து மொத்தம் ₹1,500 கோடிக்கும் அதிகமாகக் காட்டியது.

இந்த அளவுக்கு அதிக தொகை தங்களது வங்கிக்கணக்கில் இருப்பதாகச் சொன்னதும் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு கணக்கில் வந்தது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறிய காமேஷ்வர் மிஸ்ரா, இது குறித்து விசாரணை நடத்துமாறு வங்கியையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

கணக்கு இருப்புகளை அதிகாரிகள் சரிபார்க்கவும், ஏதேனும் பிழை ஏற்பட்டிருந்தால் அதைச் சரிசெய்யவும் ஏதுவாகவே தான் இந்த விஷயத்தை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த அசாதாரணமான கணக்கு இருப்புகளுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது வங்கிச் செயல்முறைப் பிழையின் காரணமாகவே இத்தொகைகள் தோன்றியிருக்கலாம் என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகளோ அல்லது வங்கிப் பிரதிநிதிகளோ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் பணத்தை எடுக்க முடியாத அளவுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டு... மேலும் பார்க்க

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மா... மேலும் பார்க்க

மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்று... மேலும் பார்க்க

ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் க... மேலும் பார்க்க

`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி

ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர். ப... மேலும் பார்க்க

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க