செய்திகள் :

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

post image

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டுக்கறி) விருந்து வைப்பதாக மணமகன் வீட்டாரிடம் மணமகள் வீட்டார் உறுதியளித்து இருந்தனர். ஆனால் ஆட்டுக்கறிக்கு பதிலாக கோழிக்கறி பரிமாறப்பட்டதால் ஏற்பட்ட மோதல் திருமண விழாவை வன்முறைக்களமாக மாற்றியது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் நகரைச் சேர்ந்த மணமகன் வீட்டார், மஹிஷி பிளாக்கில் உள்ள ராஜன்பூர் கிராமத்திற்குத் திருமணத்திற்கு வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

திருமணம் எந்த வித பிரச்னையும் இன்றி நடந்தது. திருமணம் முடிந்து மதிய உணவு தொடங்கியபோதுதான் பிரச்னை ஆரம்பித்தது. விருந்தில் ஆட்டுக்கறி விருந்துக்கு பதில் கோழிக்கறிக்கறி பரிமாறப்பட்டது. இதைப்பார்த்ததும் மணமகன் வீட்டார் டென்ஷனாகிவிட்டனர்.

ஆட்டுக்கறி விருந்து கொடுப்பதாக சொல்லிவிட்டு கோழிக்கறி விருந்து கொடுப்பதாக கூறி மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் உக்கிரமடைந்து, இருதரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக மாறியது.

அங்கிருந்தவர்கள் தடிகள் மற்றும் வாள்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. சத்தமான கூச்சல்களுக்கு மத்தியில், ஒரு கும்பல் கம்பால் திருமண விருந்தினர்களைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ஒரு வீடியோவில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பை அச்சுறுத்துவதற்காக காற்றில் வாள்களை வீசி மிரட்டுவதைக் காண முடிகிறது. இது அங்கிருந்த மற்ற விருந்தினர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

திருமண மேஜை, நாற்காலிகள் தலைகீழாகக் கவிழ்க்கப்படுவதும், உணவுத் தட்டுகள் உடைக்கப்படுவதும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவதும் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்தத் தாக்குதலில் மணமகனின் மாமா முகமது இர்பான் உட்பட மணமகன் வீட்டைச் சேர்ந்த 6 முதல் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிம்ரி பக்தியார்பூர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மா... மேலும் பார்க்க

மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்று... மேலும் பார்க்க

ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் க... மேலும் பார்க்க

`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி

ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர். ப... மேலும் பார்க்க

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நி... மேலும் பார்க்க