செய்திகள் :

``விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" - வைகோ ஆவேசம்!

post image

விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் காவல் அரணாக, போர்க் கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்திருக்கிறார். பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் 25 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்காமல் போகும். இதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கிய வில்லன் மத்திய பா.ஜ.க அரசுதான். அவர்கள் வெளிப்படையாக அனுமதி தராமல், மறைமுகமாக நிதி ஒதுக்கி அணை கட்ட ஊக்குவிக்கிறார்கள். மேகதாது அணை விவகாரத்திற்காக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் நடைப்பயணத்தை வரவேற்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தற்போதைய த.வெ.க ஆட்சியை தி.மு.க-வினர் 'குதிரை பேரம்' என்று விமர்சிக்கின்றனர். முன்னாள் தி.மு.க ஆட்சியில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. கம்ப ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தீர்களே, அந்தப் பேரத்திற்குப் பெயர் 'பெருச்சாளி பேரமா'? குதிரை பேரத்திற்கு வழிகாட்டியதே தி.மு.க-தான். இப்போது ஆட்சி கைவிட்டுப் போனதால் அதைத் தாங்க முடியாமல், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு அனுமதி பெற வேண்டுமானால் பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை கப்பம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால், தற்போதைய த.வெ.க அரசு ஊழலை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. பத்து காசு லஞ்சம் இல்லாமல் இங்கே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த நேர்மையான அரசை வீழ்த்த எதிரிகள் எத்தனை பகீரத முயற்சிகளை மேற்கொண்டாலும், நானும் என் தோழர்களும் தவெக அரசுக்கு அரணாக நின்று பாதுகாப்போம்.

கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்தது அல்ல என்பதாலேயே கடந்த காலத்தில் அமைதி காத்திருந்தேன். வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ம.தி.மு.க-வின் முழு ஆதரவு இருக்கும். தவெக - மதிமுக இடையே மிகச் சிறந்த, இணக்கமான உறவு நீடிக்கிறது." என்றார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க