செய்திகள் :

”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” - அதிமுக நிர்வாகி ஆலோசனை

post image

சட்டமன்றத் தேர்தல் தோல்வி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் ஐக்கியமாகி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

அதிமுக நிர்வாகி பத்ம.குமரேசன்
அதிமுக நிர்வாகி பத்ம.குமரேசன்

இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர், 'தலைமையகத்தில் புகார் பெட்டி ஒன்றை வைக்க வேண்டும். நிர்வாகிகள் பற்றிய புகார்களை அதில் கட்சியினர் போடுவார்கள். புகார் பெட்டிக்கு வரும் புகார்களை நீங்களே படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியில்லாத நிர்வாகிகள் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்கலாம். இது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என பேசியதாகச் சொல்கிறார்கள்.

இதே போல் கும்பகோணம் மாநகரத்தின் பகுதி கழகச் செயலாளர் பத்ம.குமரேசன் கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர் அதிமுக வலுவடைவதற்கு கட்சியில் டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும் என்றுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி, தனியாக கட்சி நடத்தி அதன் பொதுச்செயலாளராக இருப்பவரை நாம் சேர்க்க வேண்டும் என இந்த நேரத்தில் பேச வேண்டாம்.

இப்போதைய சூழலுக்கு இது சரி வராது. இந்தச் செய்தி வெளியே போய்விடும் என்று மடைமாற்றியுள்ளார். இது அரசியல் வட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினகரன்
டி.டி.வி.தினகரன்

இது குறித்து பத்ம.குமரேசனிடம் பேசினோம், ''கட்சி வளர்ச்சி பெற இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். இதே போல் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றேன். இதை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர்.

அதையே நானும் சொல்கிறேன். அதிமுக வலுவடைய வேண்டும் என்றால் தினகரனைச் சேர்க்க வேண்டும் என்று பேசினேன். தற்போதுள்ள சூழலுக்கு அரசியல் ரீதியான நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுக்க வேண்டும். அதற்கு சரியான நபர் டி.டி.வி.தினகரன். விஜய், உதயநிதி போன்றவர்களைச் சமாளிக்கவும், கட்சி வளர்ச்சி பெற்று பழையபடி வலுவாக மாறவும் தினகரன் அவசியம் வேண்டும்'' என்றார்.

மத்தியப் பிரதேசம்: "வக்பு வாரியத்தில் 2 இந்து உறுப்பினர்கள் நியமனம்" - முதல்வர் மோகன் யாதவ் உத்தரவு

வக்பு என்பது ஒரு இஸ்லாமிய பாரம்பர்யமாகும். இந்த வக்புக்காக ஒருவர் தனது சொத்தை மதம், சமூகம் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிரந்தரமாக அர்ப்பணிக்கிறார். இந்தச் சொத்து நிரந்தரமாக வக்பு வாரியத்தின் சொத்தாக... மேலும் பார்க்க

`இறுதி சட்டப்பூர்வ வழியையும் இழந்தார் நிரவ் மோடி!' - இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது எப்போது?

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் இருந்த கடைசி சட்டத் தடையும் நீங்கியுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில... மேலும் பார்க்க

`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' - எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்க... மேலும் பார்க்க

கொலம்பஸுக்கு பின்னும், சுதந்திரத்திற்கு முன்னும்.! 250 வயது சுதந்திர அமெரிக்காவின் வரலாறு என்ன?

1492-ம் ஆண்டு ஆசியாவிற்கான மேற்கு வர்த்தகப் பாதையைத் தேடி ஸ்பெயினில் இருந்து புறப்பட்டார் கடற்பயணியும், ஆய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸ். ஆனால், அவர் அடைந்ததோ அமெரிக்காவை. கொலம்பஸ் என்ன நினைத்து கிளம்... மேலும் பார்க்க

``விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" - வைகோ ஆவேசம்!

விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் காவல் அரணாக, போர்க் கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்திருக்கிறார். பல்லடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கர்நாடகா ... மேலும் பார்க்க

`Last Bench'சர்ச்சை: அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள சமை... மேலும் பார்க்க