செய்திகள் :

விவேகானந்தர் புகழைப் போற்றி வணங்குவோம்: அண்ணாமலை

post image

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று.

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர்.

`கேம் சேஞ்சர்' டிக்கெட் உயர்வைத் திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு!

இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்த அவரது பிறந்த தினமான இன்று, தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நாட்டிற்காகவும், எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, பக்தி மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கும், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 20... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 254 கன அடியாகக் குறைந்துள்ளது.வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியில் இருந்து 113.84 அடியாக ... மேலும் பார்க்க

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் ஜன.18,19 -இல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஜன.18, 19 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை ... மேலும் பார்க்க