செய்திகள் :

வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?

post image

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி, மருத்துவர் பெல்கிங் தங்கியிருந்த அறையில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அப்போது, 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இதுபற்றி வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மருத்துவர் பெல்கிங்கைத் தேடி வருகின்றனர்.

கோவா வழக்கில், அமலாக்கத்துறை வெளியிட்ட புகைப்படங்கள்
கோவா வழக்கில், அமலாக்கத்துறை வெளியிட்ட புகைப்படங்கள்

இது குறித்து, போலீஸார் கூறுகையில், ``அண்மையில் கோவா மாநிலத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

அவரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தபோது, வேலூர் சி.எம்.சி மருத்துவர் பெல்கிங் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.2 லட்சம் வரவு வந்துள்ளது. அதைத்தொடர்ந்தே, மருத்துவர் பெல்கிங் பற்றிய விசாரணையை அமலாக்கத்துறையினர் தொடங்கினர்.

பெல்கிங் அறையில் இருந்தவை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள்கள் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு போதைப்பொருள்கள் என்பதால், அவற்றின் மதிப்பு உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மருத்துவர் பெல்கிங் கைது செய்யப்பட்டால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.

விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்.ஐ-யால் மகளுக்கு ஏற்பட்ட சோகம் - கதறிய கணவன்; கத்தியுடன் சிக்கிய தந்தை

தெருவை உலுக்கிய அலறல் சத்தம்விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில... மேலும் பார்க்க

வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது - கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்

வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில்... மேலும் பார்க்க

மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி

மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை... மேலும் பார்க்க

`8 ஆண்டுகளுக்கு முன்' அலுவலகத்தில் பெண்ணுடன் கர்நாடக டிஜிபி ஆபாச செயல்; அதிர்ச்சி வீடியோ, சஸ்பெண்ட்

கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத... மேலும் பார்க்க

`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000' - மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்களிடம் நூதன மோசடி

குஜராத் மாநிலத்தில் முதியோர்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் நூதன முறையில் மோசடி செய்துள்ளது. முதியோர்களுக்கு அதிக அளவில் மூட்டு வலி இருக்கும். இதனால் அவர்களால் அதிகமாக வெளியில் செல்ல முடியாது. மூ... மேலும் பார்க்க

உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவிக்கு நேர்ந்த சோகம்

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார்... மேலும் பார்க்க