செய்திகள் :

`ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறார்..!'- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது.

அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ``முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக-வோடு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மேற்கு வங்கத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைத் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக நியமித்திருக்கின்றனர்.

அதற்கு பதிலாக பாஜக தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறேன்.

லோக் சபா தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலை திருத்தாத பாஜக, சட்டசபை தேர்தலின்போது மட்டும் அதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி திருத்தி இருக்கிறது.

அப்படி என்றால் லோக் சபா தேர்தலில் தவறான வாக்காளர் பட்டியல் மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், திரிணமுல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கைதுசெய்த ஐ.பி.எஸ் அதிகாரியை, தேர்தல் பார்வையாளராக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். திறமையான அதிகாரிகளை இங்கு பணியாற்ற விடுவதில்லை" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்...' - வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள... மேலும் பார்க்க

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்த... மேலும் பார்க்க

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? - 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' - உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் அவர் மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்தத... மேலும் பார்க்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீ... மேலும் பார்க்க

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்? – கரூரிலிருந்து களமிறங்கியது ஏன்?

கரூர் மாவட்டத்தின் பல்வேறு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 18 பேர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே திமுக கரூர் மாவட்டச் செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இடைத்தேர்தலில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி; எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை ம... மேலும் பார்க்க