செய்திகள் :

ஹரியானா: மைனர் பெண்ணுடன் காதல்; பேட்மிண்டன் வீரரைச் சித்ரவதை செய்து கொன்ற பெண்ணின் குடும்பம்?

post image

ஹரியானா மாநிலம் பிவாடி அருகில் உள்ள சைத்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோனு. பேட்மிண்டன் வீரரான மோனு ஹரியானாவில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்று இருக்கிறார்.

21 வயதாகும் மோனு சமீபத்தில்தான் 12வது வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவர் பரிதாபாத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மைனர் பெண்ணுடன் மோனு வீட்டை விட்டு வெளியேறினார். போலீஸாரின் விசாரணையில் மைனர் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் மோனுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் மோனு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியில் படுகாயத்துடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீஸார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மோனு
மோனு

உறவினர்கள் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் மோனு இறந்து போனார். பெண் வீட்டார் மோனுவைக் கடத்தி அடித்து உதைத்து வீட்டிற்கு வெளியில் போட்டுவிட்டதாக மோனுவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மோனுவின் உறவினர் நரேந்திரா கூறுகையில், ''மைனர் பெண்ணின் உறவினர்கள் சைத்பூரில் இருக்கின்றனர். இதனால் அடிக்கடி அப்பெண் தனது உறவினர்கள் வீட்டிற்கு வருவார்.

அப்படி வரும்போது மோனுடன் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. மோனுவை பெண் வீட்டார் கடத்திச்சென்று மூன்று நாள்கள் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

மோனுவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மைனர் பெண் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கரூர்: விவசாயி மீது நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு; 'நிலப் பிரச்னையா?' - போலீஸ் விசாரணை

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் கருணகிரி (48). விவசாயத் தொழிலாளியான இவர... மேலும் பார்க்க

கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு: 2 பேர் கைது; ஒருவருக்கு கை, கால் முறிவு!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேர... மேலும் பார்க்க

கோவை: காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!

காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து ... மேலும் பார்க்க

`30 சவரன் நகை... 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' - முதுகுளத்தூர் இளையராஜா

முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.'ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! - ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீ... மேலும் பார்க்க