'வில் அம்பு' பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார் - இறுதிச்சடங்கு நாளை கோவைய...
2025-ல் அமெரிக்காவுக்கு சென்ற வரிப்பணம்; இந்த ஆண்டு வட்டியுடன் திரும்புகிறது - ட்ரம்ப் அரசிற்கு செக்
2025-ம் ஆண்டு முழுவதும், உலக நாடுகளைப் பெரிதும் பாதித்த ஒன்று - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'.
இந்த வரியைக் கடந்த பிப்ரவரி மாதம், 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அதுவரை வரியாக வசூலிக்கப்பட்ட பணம் ரீஃபண்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியது.
அதன் பின், உலக நாடுகளின் மீது வரி விதிக்க ட்ரம்ப் வேறு வேறு ரூட்களைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ரீஃபண்ட் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

இதனால், தற்போது ட்ரம்ப் அரசு எந்தெந்த இறக்குமதியாளர்களுக்கு ரீஃபண்ட் பணம் சென்று சேர வேண்டும் என்பதை கணக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் சுங்க வரி மற்றும் எல்லை பாதுகாப்பு துறை, நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ள தரவுகளின் படி, கிட்டத்தட்ட 20.6 பில்லியன் டாலர்களுக்கான ரீஃபண்ட் வேலைகள் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்த ரீஃபண்ட் வட்டியுடன் இறக்குமதியாளர்களுக்கு செல்ல இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கிறது.















