செய்திகள் :

29 : " 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!"- ஷான் ரோல்டன்

post image

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார்.

விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

'29'
'29'

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.10) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஷான் ரோல்டன், " என்னுடைய 29 வயதில் நான் எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.

அந்த சமயத்தில் நான் மியூசிக்கை கொஞ்சநாள் விட்டுவிட்டேன். அந்த வருடத்தில் நான் இசையமைக்கவே இல்லை.

யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்.

நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது.

வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன்.

ஷான் ரோல்டன்
ஷான் ரோல்டன்

நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான்.

அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன்.

எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

" 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!"- கார்த்தி

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ... மேலும் பார்க்க

வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ... மேலும் பார்க்க

"நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி

`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே... மேலும் பார்க்க

"29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..!" - கார்த்திக் சுப்புராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட... மேலும் பார்க்க