செய்திகள் :

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

post image

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இர்ஷாத் என்பவர் சாம்ராவட்டத்தில் நடத்தி வந்த படிப்புக்காக வெளிநாட்டுக்கு ஆட்சேர்க்கும் நிறுவனத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்தனர். அதில், வெவ்வேறு இடங்களுக்கு கூரியர் மூலம் அனுப்புவதற்காக வைத்திருந்த சுமார் 100 போலி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சியில் வைத்து போலி சான்றிதழ்கள் பிரிண்ட் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், பொன்னானியில் வைத்து பணம் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. பொன்னானியில் போலீஸார் நடத்திய விசாரணையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட போலி சீல்-கள், துணை வேந்தர்களின் சீல்கள், அதி நவீன கம்ப்யூட்டர்கள், பிரிண்டிங் மிஷின்கள் மற்றும் சுமார் ஒரு லட்சம் போலி சான்றிதழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

போலி சான்றிதழ்கள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த கும்பலுக்கு தலைவன் என கருதப்படும் மீனடத்தூர் பகுதியைச் சேர்ந்த தனீஷ் தர்மன்(38), பொன்னானி இர்ஷாத்(39), ராகுல்(30), பய்யனங்காடி அப்துல் நிஷார்(31), நெடுமங்காட்டைச் சேர்ந்த ஜஸீம்(31), ரதீஷ்(37), ஷபீக் (37) தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த ஜமாலுதீன்(40), வெங்கடேஷ் (24), விருதுநகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (24) ஆகியோர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ்களுக்கான ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துவந்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளி என கருதப்படும் தனீஷ் தர்மனுக்கு திரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா, புனேவில் இரண்டு ஐந்து நட்சத்திர பார்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வணிக நிறுவனமும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அவர் நடத்திவருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தனீஷ் தர்மன் தனது பெயரை டானி எனக்கூறிக்கொண்டு போலி சான்றிதழ் தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலி சீல்களை கைப்பற்றிய போலீஸ்

காவல்துறையினரால் பிடிபட்ட போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு சான்றிதழ்களை விநியோகித்துள்ளதாக கண்டறிந்துள்ளது. கேரள மாநிலம் மட்டும் அல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தனீஷ் தர்மன் பொள்ளாச்சியில் அலுவலகம் எடுத்து சிவகாசியில் பிரிண்டிங் தொழிலில் உள்ள சிலரை வேலைக்கு அமர்த்தி போலி சான்றிதழ் அச்சடித்துள்ளது தெரியவந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட போலி சான்றிதழ்களை அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கும் படலத்தில் போலீஸார் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலைகளில் யாராவது சேர்ந்துள்ளனரா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

`ஊழல் புகார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து' - ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச... மேலும் பார்க்க

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க