செய்திகள் :

`ஊழல் புகார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து' - ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை (நான்கு ஆண்டுகளில்) 1 கோடி 10 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தங்கபாண்டியன்
தங்கபாண்டியன்

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கபாண்டியனுக்குச் சொந்தமான படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள சொந்த வீடு, பண்ணைத் தோட்டம், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது தங்கபாண்டியன் இல்லாத நிலையில், அவரது மனைவி காசியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், நகை பில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊழல் புகார் காரணமாக ஏற்கனவே தங்கபாண்டியன் தற்காலிகப் பணியிடை நீக்கத்தில் இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவம்தான் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தக் கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயி, ஊராட்சிச் செயலாளர் தங்கபாண்டியன் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார் என்று புகார் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், அம்மையப்பனை பகிரங்கமாக நெஞ்சில் மிதித்துத் தாக்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்தது.

ஊராட்சி செயலாளர் வீடு

அதன் பிறகுதான் அவரது சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதற்கிடையில் வேறொரு வழக்கில் வன்னியம்பட்டி காவல்துறையினர் தங்கபாண்டியனை நேற்று கைது செய்துள்ளனர். அவர் தற்போது வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க