செய்திகள் :

பனையூரில் பா.ம.க பாலு; விஜய்க்கு அழைப்பு விடுத்த அன்புமணி

post image

இன்று (டிச.11) காலை 10 மணிக்கு பனையூரில் தவெக மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அன்புமணியின் ஆதரவாளரான பாமக பாலு தவெக அலுவலம் வந்திருக்கிறார்.

தவெக ஆலோசனைக் கூட்டம்
தவெக ஆலோசனைக் கூட்டம்

கட்சியின் கட்டமைப்பு மற்றும் மா.செக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டம் முடிகிற தருவாயில் அன்புமணியின் ஆதரவாளரான அட்வகேட் பாலு பாமக நிர்வாகிகளோடு பனையூர் அலுவலகம் வந்தார்.

செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

பா.ம.க பாலு
பா.ம.க பாலு

இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.

சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விஜய்யின் தவெகவும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம்.

அவர்களும் தவெக சார்பில் கட்டாயம் கலந்துகொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரமில்லை என சட்டமன்றத்தில் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

17 ஆம் தேதி நடக்கும் போராட்டம் தமிழக அரசியலில் முக்கியமான போராட்டமாக இருக்கும்.

தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை அழுத்தமாக கூறுகிறார்கள்.

திமுகவை தவிர எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.இது போராட்டத்துக்கான அழைப்பு" என்று பேசினார்.

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்" - தவெக நிர்மல் குமார் பதில்

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங... மேலும் பார்க்க

"நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது. அதில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி இருப்பதாக தீர்மானம் நி... மேலும் பார்க்க

'முதல்வர் வேட்பாளர் விஜய்தான்; கூட்டணி பேச தனிக்குழு!' - தவெக அப்டேட்ஸ்!

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் கூட்டம் நடந்திருந்தது. இதன்முடிவில், தவெக சார்பில் தேர்தல் கூட்டணியை பேச ஒரு குழுவும், தேர்தல் வா... மேலும் பார்க்க

`தொகுதி மாறும் நயினார்’ முதல் `மறுக்கும் தினகரன்; கிளம்பும் முடிவில் சீனியர்கள்’ வரை! | கழுகார்

பா.ஜ.க-வில் பதவி!ம.தி.மு.க-வில் இணைந்தவருக்குநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் தாயகம் குருநாதன்... மேலும் பார்க்க

மள்ளர் சேனை : ஒருபக்கம் பிற கட்சி பிரமுகர்கள்; மற்றொரு பக்கம் சமூக அமைப்புகள் - தவெக பிளான் என்ன?

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் ஜுரம் பற்ற தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்கிவிட்டன. தமிழக வெற்றிக் கழகமும் மற்ற கட்சிகளைப்போல அரசியல் பகடைகளை உ... மேலும் பார்க்க