பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி
'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.
அதில் பேசியிருக்கும் கார்த்தி, " நான் எம்.ஜி.ஆர் சாரை நேர்ல பார்த்திருக்கேன். எங்க வீட்டுக்கு பின்னாலத்தான் அவருடைய ஆபிஸ் இருக்கும்.
ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம்.
அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு.
எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு.

பார்க்கிறதுக்கு ரோஸ் கலர்-ல இருப்பாரு. இதுதான் அவரை நாங்க நேர்ல பார்த்த ஞாபகம்.
எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படமெல்லாம் எல்லார் வீட்டிலையும் ஓடிக்கிட்டே இருக்கும்.
இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை பத்தி பேசிட்ருக்காங்க. மக்களை அவ்வளவு நேசிருக்காரு.
மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு" என எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.


















