செய்திகள் :

3-வது ஆட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு: "பயோகேஸ் நோக்கி இந்தியா நகர வேண்டும்" - பிரதமர் அறிவுறுத்தல்

post image

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு ஜூன் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் பிற இணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்ற இந்த உயர்மட்டக் கூட்டம், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

மோடி - அமைச்சர்கள்
மோடி - அமைச்சர்கள்

இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம், தொழிலாளர் நலன் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக, மேற்கு ஆசியப் போர் காரணமாக இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து இதில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உலக அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பிரதமர், ``சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் முட்டுக்கட்டை காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பயோகேஸ் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கி இந்தியா தீவிரமாக நகர வேண்டியது அவசியம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், அரசு நிர்வாகத்தில் சிவப்பு நாடா முறையை ( bureaucratic red tape) முற்றிலும் ஒழிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொரு மேஜைக்குக் காலவரம்பின்றி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது.

எந்தவொரு பணியும் தொய்வடையாமல், எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மிக விரைவாக மக்களுக்குப் பலன் தரும் வகையில் செயலாக்க வடிவம் பெற வேண்டும்" என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோவையில் டாஸ்மாக் மூடலால் கல்லா கட்டும் FL 2 பார்! - சட்ட சிக்கலை தவிர்க்க நூதன முயற்சி? | Exclusive

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற உடன் பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மூ... மேலும் பார்க்க

TVK Minister: மொபைல் கடை உரிமையாளர் டு போக்குவரத்துத்துறை அமைச்சர்! - யார் இந்த தமிழன் பார்த்திபன்?

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில்... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து... மேலும் பார்க்க

அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி

தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொக... மேலும் பார்க்க

கடன் பெற்றவர்களுக்கு 'மரியாதை': கடன் வசூலிக்கும் ஏஜென்ட்டுகளுக்கு RBI வழிகாட்டுதல்கள்! | 15 Points

கடன் வாங்கியவர்களுக்கும், கடன் வாங்க உள்ளவர்களுக்கு உள்ள பெரும் பயமே 'கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து திட்டிவிடுவார்களோ' என்பது தான். இங்கே பலரால் சூழல்களால் தான் கடன் தவணையைக் கட்ட முடியாமல் போய்வ... மேலும் பார்க்க

தேனி: அரசு மருத்துவமனை வார்டுகளில் சுற்றித் திரியும் எலிகள்; நோயாளிகள் அச்சம்!

தேனி மாவட்டம், கானா விலக்கில், அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரளம் மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும்... மேலும் பார்க்க