செய்திகள் :

30% மதிப்பு குறைந்தும் தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்தை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத மக்கள்! - இனி?

post image

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம், இப்போது பாகிஸ்தானில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறான். ஆனால் தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சொத்துக்களை வாங்க பொதுமக்கள் அச்சப்பட்டனர். அதோடு இச்சொத்துக்களில் சட்டச்சிக்கல் இருக்கும் என்று அஞ்சினர்.

ஆனால் இப்போது மக்கள் தாவூத் சொத்துக்களை ஏலம் விட்டால் அதனை வாங்க முன் வருகின்றனர். தாவூத் இப்ராகிம் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துக்கள் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாக்கே என்ற கிராமத்தில் இருக்கிறது.

ஹசீனா, தாவூத்

மும்பாக்கே கிராமம் தான் தாவூத் இப்ராஹிம் சொந்த ஊர் ஆகும். அங்கு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்கு சொந்தமான வீடு உட்பட சில சொத்துகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. தற்போது தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயரில் 4 விவசாய நிலம் இருந்தது.

அந்த நிலம் தான் இப்போது விற்பனைக்கு வந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதில் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டது. ஆனால் அவை விற்பனையாகவில்லை. ஒரு சொத்தை டெல்லி வழக்கறிஞர் அஜய் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக கேட்டு ஏலத்தில் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அதற்கான பணத்தை செலுத்தவில்லை.

இதனால் அந்த விற்பனை ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு சொத்தை சேர்த்து 4 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இதில் சில சொத்துகள் கடந்த முறை ஏலம் போகாத காரணத்தால் இம்முறை சொத்து மதிப்பை 30 சதவீதம் குறைத்து ஏலம் விடப்பட்டன.

ஆனாலும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மீண்டும் ஒரு முறை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சொத்துகள் முதலில் தாவூத் இப்ராஹிம் தாயார் அமீனா பெயரில் இருந்தது. அதன் பிறகு தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயருக்கு மாறியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1730 சதுர மீட்டர் விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்திற்கு ஏலம் போனது. இதே போன்று 2020ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான 6 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. 2019, 2018, 2017ம் ஆண்டும் மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிம் குடும்ப சொத்துகள் ஏலத்தில் விற்கப்பட்டன செய்யப்பட்டது.

தற்போது மும்பையில் தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான பெரும்பாலான சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏலத்தில் விற்பனை செய்துவிட்டனர். தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான கார் ஒன்று ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதே போன்று கும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிம் வாழ்ந்த வீடு ரூ.11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. அதிகமான சொத்துகளை இஸ்லாமிய டிரஸ்ட்களும், டெல்லி வழக்கறிஞரும் ஏலத்தில் எடுத்திருக்கின்றனர்.

TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்

"நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்"- தவெக விஜய் மேலும் பார்க்க

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர... மேலும் பார்க்க

"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று. ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது. எவ்வளவு நிராகரிப்புகள்? கடந்த ஆகஸ்ட் மாதம், ... மேலும் பார்க்க