செய்திகள் :

453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

post image

நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் பிரித்திவிராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத்தின் கல்வெட்டுக்கு அருகே கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தார். இதனையடுத்து பல்கலைத் தொல்லியல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கல்வெட்டு உள்ள ஒரு தூணின் ஒரு புறத்தில் சங்கு, சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு

அதன் கீழ்புறம் தற்கால தமிழ் வாசகங்கள் தொடங்குகின்றன. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28-ம் நாள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இக்கல்வெட்டு 453 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தொல்லியல்துறையின் உதவிப்பேராசிரியர் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் ஆய்வு செய்து கூறினர். அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயிலின் நித்திய பூசைகளுக்காக நிலங்களை வழங்கியதை இக்கல்வெட்டு கூறுகிறது.

அக்கல்வெட்டில் திருவேங்கடநாதர் என்ற கடவுளின் பெயரைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டில் காணப்படும் ”புறவாரி” என்ற சொல், தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மீதான அரசு வரிகள் நீக்கப்பட்டு அந்த வருமானம் முழுவதும் கோயிலுக்கு சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் கருங்கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

கல்லால் ஆன பீரங்கு குண்டுகள்

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரத்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வாகை மரம் பட்டுப்போயி விழுந்ததாகவும், அதன் வேர்ப்பகுதியில் இதுபோன்ற பீரங்கு குண்டுகள் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த குண்டுகள் பெரும்பாலும் 2 முதல் 3 அங்குல விட்டத்துடனும் காணப்படுகிறது. இவை ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இவற்றின் மூலம்  இதன் மூலம் 450 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தொல்லியல்துறை பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

யாக்கைக்களரி: `போர் அழிக்க முயன்ற உடல்களை மீண்டும் மனிதர்களாக்கும் தருணம்'- இது போர்நிலத்தின் சாட்சி

உலகில் போர்ச்சூழல் எங்கு நிலவினாலும் போர் பற்றிய நினைவும், பாதிப்பும் பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப்போர்ச்சூழலின் நினைவுச்சுமையை நம் உணர்வுகளில் கடத்தி கணக... மேலும் பார்க்க

சென்னை: `வீதிவிருது' விழாவில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக்காரர்கள்!

சென்னையில் மாற்று ஊடக மையத்தினால் நம் மண்ணின் கலைஞர்களுக்கு விருது வழங்கும் 'வீதி விருது விழா' வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. 13-ஆம் ஆண்டு வீதி விருது விழா கடந்த 3 ஆம் தேதி சென்னை முகப்பேர் கிழக்கில... மேலும் பார்க்க

'குழந்தைகள் நம் பெருமைக்கான பொருள்கள் அல்ல...' - கதைச்சொல்லி குமார் ஷா

' நாடோடி, இலக்கில்லா திசைகளை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருப்பான்... அந்தப் பயணங்களின் வழி பல இலக்குகளை எட்டியிருப்பான்' அவ்வாறு நாடக கலைஞர், ட்ராவலர், கதைச்சொல்லி என, தன் பயணத்தின் வழி பல்வேறு பரிமாணங... மேலும் பார்க்க

சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album

Kanimozhi: "நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்" - கனிமொழி மேலும் பார்க்க