செய்திகள் :

5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!

post image

கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது தடகள வீராங்கனை பல்வேறு நபர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குழந்தைகள் நலக் கமிட்டியில் புகாரளித்துள்ளார்.

இதில் அந்தப் பெண்ணின் பயிற்சியாளர், சக விளையாட்டு வீரர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணின் புகாரின் படி, அவருடைய மீது 13 வயதில் உறவினர் ஒருவர் ஆபாச விடியோக்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை

மேலும், அந்தப் பெண்ணின் நண்பர்கள் தங்களது வீட்டின் அருகிலிருக்கும் மலைப்பகுதியில் வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 62 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, 40 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சுபின், சந்தீப், வினீத், அனந்து, ஸ்ரீனி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு குழந்தைகள் நலக் கமிட்டியும் காவல்துறையும் உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்டச் சிறுமி காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எலவும்திட்டா பகுதி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மற்ற காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு குறித்த மேஎலதிகத் தகவல்கள் இன்று வெளியிடப்பட்டும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேசி ஆதாரங்களைக் கேட்டறிவார் என்றும் கூறப்படுகிறது.

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க