`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அ...
``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்
நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.
எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் இணைந்தார்.
செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவுக்குப் பக்கபலமாக நின்றவர்.

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக தொண்டர்களின் மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவரான செங்கோட்டையன் இப்போது தவெகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர், இப்போது விஜய்யை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக அரசியல் பயணத்தில் மிகப்பெரிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், "20 வயதில் இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அதிமுகவில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், அவருடைய அரசியல் அனுபவம், களப்பணிகளின் அனுபவங்கள் எல்லாம் பெரும் உறுதுணையாக இருக்கும். அவருடன் இணைந்து கைகோர்த்திருக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.
நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று காணொலி மூலம் பேசியிருக்கிறார்.
















