செய்திகள் :

Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!

post image

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

Hong Kong: தீ விபத்து
Hong Kong: தீ விபத்து

பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்!

ஹாங்காங்கில் உயரமான குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.டாய் போ (Tai Po) மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு அடுக... மேலும் பார்க்க

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ள... மேலும் பார்க்க

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத... மேலும் பார்க்க