`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அ...
TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?
செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம்(நவ.25) கோவையிலிருந்து சென்னை வந்தார். செங்கோட்டையனை துக்ளக் ரமேஷ், பெங்களூரு புகழேந்தி போன்றோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.
நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் செங்கோட்டையன். இதையடுத்து மாலை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசினார்.

இதைத்தொடர்ந்து இன்று (நவ 27) செங்கோட்டையன், தனது ஆதரவாளர் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாக தகவல் வெளியானது.
எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார்.
காலை 9.30 மணியளவில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் ஆஜராகவிட்டனர்.
செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். முன்னதாக நேற்று விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு ஆதவ் காரில்தான் வந்திருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.






இன்று செங்கோட்டையன் பனையூர் அலுவலகம் வரும்போது அங்கு, சிறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமாகவும் தள்ளுமுள்ளுவாகவும் மாறியது.
செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசி தாக்க முற்பட்ட பாதுகாவலரை மன்னிப்பு கேட்க சொல்லி செய்தியாளர்கள் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.
















