செய்திகள் :

``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்

post image

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

'செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார்' என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு
விஜய்- செங்கோட்டையன் சந்திப்பு

இதுகுறித்து பேசியிருக்கும் அமுமுக டிடிவி தினகரன், "நாங்கள் எல்லாம் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது அரசியலில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக நின்றவர்.

இன்றைக்கு அவர் அரசியலில் எடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அரசியலில் அதிக அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் எந்தவொரு முடிவையும் சரியாக யோசித்துதான் எடுப்பார்.

கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன்.

அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம்" என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இர... மேலும் பார்க்க

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்க... மேலும் பார்க்க

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்பு... மேலும் பார்க்க

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொல... மேலும் பார்க்க

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை" என்றும் "திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகி... மேலும் பார்க்க

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல்... மேலும் பார்க்க