செய்திகள் :

Akshay Kumar: "சக நடிகர்களின் வெற்றி பொறாமையை ஏற்படுத்துகிறதா?" - அக்‌ஷய் குமாரின் பதில் என்ன?

post image

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'துரந்தர்' (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் குமார் பேசியிருக்கிறார்.

Dhurandhar Movie
Dhurandhar Movie

டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' நிகழ்வில் (India Today Conclave) இது குறித்து பேசியிருக்கிறார்.

அவர், "'துரந்தர்' படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம். படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைகள் நிறைந்துள்ளன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கிறார்கள்.

ரன்வீர் சிங் ஒரு 'ஆங்கிரி யங் மேன்' பிம்பத்தைச் சரியாக அந்தப் படத்தில் திரைக்குக் கொண்டு வந்திருந்தார்.

இயக்குநர் ஆதித்யா தர் என்னை அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நினைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகர் அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

பலமுறை நான் ரன்வீரை சந்திக்கும்போது, அவர் என்னிடம் 'அது எவ்வளவு சிறந்த படம், நான் அதில் நடித்திருக்க வேண்டும்' என்று என்னிடம் கூறுவார். இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்புதான்.

சில படங்கள் அவர் செய்திருக்கலாம் என நினைக்கிறார். சிலவற்றை நான் செய்ய நினைக்கிறேன். நாங்கள் சுமார் 15-20 நடிகர்கள் இருக்கிறோம்.

இந்தியாவில் 180 படங்கள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. ஒரு சிறந்த படத்தில் நாம் நடித்திருக்கலாமே என்ற வருத்தம் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் மீது பொறாமை ஏற்படுவதில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Aamir Khan: 'ஆமிர் பாய்க்கு...' - 61வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின்... மேலும் பார்க்க

"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி ... மேலும் பார்க்க

Dhurandhar 2: "தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியில்.!" - ராம் கோபால் வர்மா

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியம... மேலும் பார்க்க

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் Spirit மற்றும் Kalki 2898 ADபோன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுக... மேலும் பார்க்க

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ... மேலும் பார்க்க

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க... மேலும் பார்க்க