ரஹ்மான் டு சாய் பல்லவி: திரண்ட திரைநட்சத்திரங்கள்; தமிழ்நாடு அரசு விருது விழா - ...
Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு' தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!
பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13)
அவர் இயக்கிய சில படங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
* 1977-ல் 'கோகிலா' என்ற கன்னடப் படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் படம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மோகன், ஷோபா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிறந்த ஒளிப்பதிவிற்கான முதல் தேசிய விருதினை பாலுமகேந்திராவுக்கு இந்தப் படம் பெற்று தந்திருக்கிறது.

* 1979-ல் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இந்தப் படம் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, பருவ வயதில் எப்படி இருக்கும் என்பதை அப்படியே சொன்ன படம்.
* 1980-ல் வெளியான படம் 'மூடுபனி'. மீண்டும் பிரதாப் போத்தன், ஷோபாவை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். பாலுமகேந்திராவுக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம் இது.
* 1982-ல் மலையாளத்தில் வெளியான படம் 'ஓளங்கள்'. இது அவர் இயக்கிய முதல் மலையாளப் படம். பூர்ணிமா ஜெயராம், அம்பிகா, அமோல் பாலேகர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஜானகி பாடிய ‘தும்பி வா தும்பக்குளத்தில்’ பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் க்ளாஸ் ஹிட் அடித்தது.
* 1982-ல் வெளியான படம் நிரீக்ஷனா. பானு சந்தர், அர்ச்சனா இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் சோதனை முயற்சியில் இறங்கி அங்கேயும் ஹிட் அடித்திருக்கிறார்.
* 1982-ல் 'மூன்றாம் பிறை' படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நடிப்பிற்காக கமலுக்கும், ஒளிப்பதவிற்காக பாலுமகேந்திராவிற்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. கண்ணதாசனின் கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே!’ இன்றைக்கும் எவர் கீரின்.

* 1983-ல் வெளியான மலையாளப் படம் ‘ஓமக்குயில்’. ஒய்.ஜி மகேந்திரன், அருணா, பூர்ணிமா ஜெயராம் நடித்திருக்கின்றனர். கன்னடத்தில் வெளியான ‘கோகிலா’ படத்தின் ரீமேக் இது.
* 1983-ல் இந்தியில் வெளியான படம் ‘சாத்மா’ கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக். இளையராஜா இசையமைத்த முதல் இந்திப் படமும் இதுதான்.
* 1985-ல் வெளியான படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ ரஜினிகாந்த், மாதவி இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலுமகேந்திரா இயக்குநராக ரஜினியுடன் சேர்ந்த முதல் படம் இதுதான்.
* 1988-ல் வெளியான படம் ‘வீடு’. அர்ச்சனா பானுசந்தர் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம். சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

* 1989-ல் வெளியான படம் ‘சந்தியா ராகம்’. இந்தப் படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா நடித்திருக்கின்றனர். அவருக்கு இந்தப் படமும் தேசிய விருதை அள்ளிக்கொடுத்தது. ‘ எந்த சமரசமும் இல்லாமல் நான் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்’ என்று பாலுமகேந்திரா சொன்ன படம் இது.
* 2013-ல் வெளியான படம் ‘தலைமுறைகள்’. பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பாலு மகேந்திராவின் கடைசிப் படம் இது.
தமிழையும், இந்தத் தாத்தாவையும் மறக்கவே முடியாது!


















