செய்திகள் :

BTS ரசிகர்களுக்கு ஒரு Shock… `கேட்கும் திறன் குறைபாடு' - பாடகர் V பகிர்ந்த தகவல்!

post image

BTS ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்! உலகப் புகழ்பெற்ற K-pop குழுவான BTS-ன் பாடகர் V, தனக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைபாடு இருப்பதாக முதன்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

V எனும் மேடைப் பெயரால் அறியப்படும் 30 வயதான BTS குழுவின் பாடகர் கிம் தே-ஹ்யுங் (Kim Tae-hyun) சமீபத்தில் நடைபெற்ற Live stream நிகழ்ச்சியில் பேசியபோது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். இதைப் பற்றி தனது ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது இதுவே முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது இடது காதில் கேட்கும் திறன் நன்றாக இருப்பதாகவும், வலது காதில் அதைவிட 30% மிகவும் குறைவாக இருப்பதாகவும் V குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இதை V பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இது வெறும் "மன வலிமை தொடர்பான விஷயம்" என்று நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களைத் தொடர்ந்து சந்தித்து சிகிச்சை பெற்று வருவதுடன், மருந்துகளையும் எடுத்துக்கொண்டு வருவதாக V தெரிவித்துள்ளார்.

அதே Live stream நிகழ்ச்சியில் பேசிய BTS பாடகர் ஜியோன் ஜங்-குக் (Jeon Jung-kook)-கும் தனது காலில் ஏற்பட்ட காயம் குறித்து பேசியுள்ளார்.

சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் குறித்து பேசிய அவர், அதை கவனமாக நிர்வகிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க காயத்தை சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

BTS குழு வரும் மாதங்களில் மேலும் பல நாடுகளுக்கு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஒருபுறம் உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் BTS-ன் இசைப் பயணம் தொடர்ந்தாலும், V-ன் கேட்கும் திறன் குறித்த இந்தத் தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவத... மேலும் பார்க்க

சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!

சபரிமலையிலும், பம்பையிலும் நடிகர் மோகன்லாலின் சினிமா படப்பிடிப்புக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'துடரும்'... மேலும் பார்க்க

கே.பாக்யராஜுக்கு விழா... புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்! - பின்னணி என்ன?

மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு, பெப்சி உள்ளிட்ட திரையுலகத்தினர் நடத்தும் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்.இந்தச் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

மீண்டும் செயல்படத் தொடங்கிய அறக்கட்டளை; அடுத்த வருஷம் திருமணம்? - ‘பரம்பொருள்’ மகா விஷ்ணு அப்டேட்

சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ முதலான படங்களில் நடித்த மிருணாளினி ரவி ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுடனான தனது காதலை நேற்று அறிவித்தார்.‘உன்னை நேசிப்பது கடைசியில் என்னையே நான்... மேலும் பார்க்க

`பெத்தி' படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், 'பெத்தி' திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவ... மேலும் பார்க்க