செய்திகள் :

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ஈரான் பதிலடி

post image

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப் போரின் மையமாக மாறிவிட்டது.

அணு ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த இந்தப் போர் என்று கூறிய அமெரிக்கா, இப்போது ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை திறக்கவும், அங்கே ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதை முனைப்புடனும் எதிர்த்து வருகிறது அமெரிக்கா.

விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவிற்கு!

இந்த நேரத்தில் நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், "ஈரானை நாம் முற்றிலும் வீழ்த்திய பிறகு, அவர்கள் இப்போது மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வெகு விரைவில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக நான் அறிவிக்கப்போகிறேன். அதனால் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

உங்கள் பெட்ரோலுக்கு நீங்கள் மிகக் குறைந்த அளவில் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருந்தால், உலகிலேயே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் முதன்மை நாடான ஒரு மிக மோசமான நாட்டின் கையில் அணு ஆயுதம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

எனவே, பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு $4 ஆக உயர்ந்து, நீங்கள் கொஞ்சம் கூடுதல் பணம் கொடுக்க நேரிடும் போது இதைக் நினைத்துப் பாருங்கள்.

இந்தப் போருக்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நான் சரியான காரியத்தைத்தான் செய்திருக்கிறேன்." என்றார்.

'அது முடியாது' - ஈரான் பதிலடி

ட்ரம்பின் இந்தப் பேச்சிற்குப் பதிலடியாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாடி, "ஈரானை வீழ்த்திய பிறகு, ஹார்முஸ் நீர்ச்சந்தியை வெகு விரைவில் அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்!

ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒரு ட்வீட் மூலமாகவோ, போர்க்கப்பலை அனுப்பியோ, ஒரு உத்தரவைப் பிறப்பித்தோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சின் மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது.

ஈரான் மிரட்டல்களுக்குப் பயப்படுவதும் இல்லை. அதிகாரத்தைக் கண்டு அஞ்சுவதும் இல்லை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

80வது சுதந்திர தினம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிட்ட விஜய் | Live Updates

அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்கோட்டை கொத்தாளத்திற்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய். இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் வ... மேலும் பார்க்க

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" - மாணிக்கம் தாகூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய தலைமுறை அரசியல்' என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்... மேலும் பார்க்க

80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் பிரதமர் மோடி | Live

செங்கோட்டையில் பிரதமர் மோடி!இன்று காலை பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் போர் நினைவிடம் சென்றும் மரியாதை செலுத்தினார். தற்போது அவர் செங்கோட்டைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' - தவெக அரசை சாடும் உதயநிதி

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது ச... மேலும் பார்க்க

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.... மேலும் பார்க்க

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.... மேலும் பார்க்க