செய்திகள் :

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" - மாணிக்கம் தாகூர்

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய தலைமுறை அரசியல்' என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

"தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

முதன்முறையாக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்று இந்தப் பொறுப்பை அடைய அவர் மேற்கொண்ட கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தியாகங்கள் பாராட்டுக்குரியவை.

59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு.ராஜேஷ் குமார் மற்றும் திரு.விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையின் அங்கமாக இருப்பது பெருமைக்குரிய தருணம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்று, அதை நேரில் காணும் இந்த வரலாற்றுப் பொறுப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்ற எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் நலனையும், மக்களின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்".

80வது சுதந்திர தினம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிட்ட விஜய் | Live Updates

அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்கோட்டை கொத்தாளத்திற்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய். இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் வ... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ஈரான் பதிலடி

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப் போரின் மையமாக மாறிவிட்டது. அணு ஆயுத உற்பத்தியைத் தடுத்து நிறுத்த இந்தப் போர் என்று கூறிய அமெரிக்கா, இப்போது ஈரான் ஹார்... மேலும் பார்க்க

80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் பிரதமர் மோடி | Live

செங்கோட்டையில் பிரதமர் மோடி!இன்று காலை பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் போர் நினைவிடம் சென்றும் மரியாதை செலுத்தினார். தற்போது அவர் செங்கோட்டைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' - தவெக அரசை சாடும் உதயநிதி

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது ச... மேலும் பார்க்க

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் வரியில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி வழியை பின்பற்றுவதாக கூறியிருந்தது.... மேலும் பார்க்க

"இவர்களை பார் கவுன்சிலில் சேர்க்க வேண்டாம்" - BCI உத்தரவு; CJI சூர்ய காந்த்தின் அதிரடி பதில்!

'கரப்பான்பூச்சி' - இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் சொன்ன இந்த வார்த்தைதான், டெல்லி ஜந்தர் மந்தர் முதல் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு அமைச்சரின் விலகல் வரை ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்றே சொல்லலாம்.... மேலும் பார்க்க