செய்திகள் :

Delhi Blast: ``நாடு எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்'' - டெல்லி குண்டுவெடிப்பு குறித்து EPS, மோடி

post image

டெல்லியில் செங்கோட்டை அருகே ஹூண்டாய் ஐ20 கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த சூழலில் டெல்லி வெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், "டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இழப்பால் ஆழ்ந்த துயரமடைந்தேன். இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அதே நேரத்தில், ஃபரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்களும் பல AK-47 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் வெடித்த சம்பவம்
டெல்லி

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையை மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த தவறாத நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வலியுறுத்துகிறேன். கடலோரப் பகுதிகளில் சிறப்பு கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும், இதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் வலுவான உளவு அமைப்புகள் தேவை." எனக் கூறியுள்ளார்.

வாகன வெடிப்பு குறித்து ஆராய்ந்துவரும் பிரதமர் மோடி, "டெல்லியில் நடந்த வெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை ஆய்வு செய்தேன்." என சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

அமித் ஷா தலைமையில் டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்சா மற்றும் மருத்துவர்கள் குழுவுடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வெடிப்புக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லி வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெல்லியில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியாணா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குமரி: ``கல்குவாரிகள் உருவாக பொன்னாரும் தளவாய்சுந்தரமும்தான் காரணம்'' - அமைச்சர் மனோதங்கராஜ் ஆவேசம்

பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுகன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்துக்கு கடந்த 7-ந் தேதி பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று மாலை அணிவித்தது காமராஜரை அவமதிக்கும் ... மேலும் பார்க்க

கேரளா: `2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்' - விதிமுறைகளை அறிவித்த தேர்தல் ஆணையம்; மோதும் 3 கூட்டணிகள்

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் வெளியிட்டார்.முதற்கட... மேலும் பார்க்க

Duraimurugan-க்கு ஜாக்பாட், Vijay-க்கு எதிராக Udhayanidhi மூவ்!

'STALIN 7' முன்பு எடப்பாடி, விஜய், SIR, சீனியர்கள் என நிறைய சவால்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் முறியடிக்க கூட்டணியை அனுசரிப்பது, சீனியர்களுக்கு முக்கியத்துவம் என புது ரூட் எடுத்திருக்கும் மு.க ஸ்டாலின... மேலும் பார்க்க

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க