செய்திகள் :

DMK: குறைசொல்லும் ஜோடங்கர்; ராகுலுடன் சந்திப்பு நடத்திய கனிமொழி - திமுகவின் தேர்தல் திட்டம் என்ன?

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார்.

திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்?

அதில் “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? என தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன. 28) ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிரிஷ் ஜோடங்கர்
கிரிஷ் ஜோடங்கர்

திமுகவின் திட்டம் என்ன?

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் திமுகவின் திட்டம்தான் என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் பிரியனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

திமுக கூட்டணிக்கு வரும் புதிய பிளேயர்கள்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “ திமுக, கூட்டணி குறித்து பொதுவெளியில் ஏன் பேசாமல் இருக்கிறது என்றால், அங்கே புதிய பிளேயர்கள் வர உள்ளார்கள் என்று அர்த்தம். 

தேமுதிக, ஓபிஎஸ் அணி மற்றும் இன்னும் சில கட்சிகள் திமுகவுடன் இணைகிற சூழல் இருந்து வருகிறது. 

திமுக இன்னும் தேர்தலுக்காக தனிக்குழுவை நியமிக்கவில்லை. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் வருகிறது.

தேமுதிக
தேமுதிக

திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக

கூட்டணிக்காக ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தகவல்கள் வெளியில் கசியும் என்று நினைக்கிறது திமுக. அதைத் தவிர்க்க, திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. 

புதிய கட்சிகள் இணைவதால் தங்களுக்கான இடங்களைக் குறைத்துக்கொண்டு 175 இடங்களில் போட்டிப்போட இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

முக்கியமாக, ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது. இதை ஏற்கனவே திமுக சொல்லியும் விட்டது. 

கறார் ஸ்டாலின்

இடங்களை அதிகரிப்பது என்றாலும், ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் ஓரிரு இடங்களை அதிகப்படுத்திக் கொடுப்பார்களே தவிர, அதற்கு மேல் வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி 'ஆட்சியில் பங்கு', 'அதிக சீட் கேட்பது' போன்ற விஷயங்களைச் செய்கிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கெல்லாம் ஒத்துப்போகவில்லை. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் வைத்துக்கொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருக்கிறது திமுக.

இதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

உஷாராக இருக்கும் திமுக

திமுகப் போட்டியிடும் இடங்களைக் குறைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. காரணம், அவர்கள் போட்டிபோடும் இடங்களைக் குறைத்தால், வெற்றி பெறும் இடங்களும் குறையும். அதன் பின், கூட்டணி ஆட்சி கட்டாயமாகிவிடும் என்று கருதுகிறார்கள். 

கூட்டணி கட்சிகள் என்ன கணக்கு போட்டாலும், திமுக இடங்களை ஒதுக்குவதில் மிகுந்த உஷாராக இருக்கிறது” என்று விளக்கினார்.

“எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” - விஜய்யின் தந்தை அழைப்புக்கு செல்வப்பெருந்தகை பதில்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன... மேலும் பார்க்க

'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' - தவெக

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது.TVKஅதில் பேசிய செங்கோட்டையன், '234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் ... மேலும் பார்க்க

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்

தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம்... மேலும் பார்க்க

சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் ... மேலும் பார்க்க

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்... மேலும் பார்க்க

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் ... மேலும் பார்க்க