‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் ...
IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?
'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல்.20) ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த அஸ்வனி குமார் யார்?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி குமாருக்கு 24 வயது. அவரது தந்தை சாதரண விவசாயி.
கிரிக்கெட் விளையாடத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழலில், கேன்வாஸ் காலணிகளை அணிந்து கொண்டு, ஷேர் ஆட்டோ மற்றும் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சியை பெற்றிருக்கிறார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் அஸ்வனி குமார். விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சி டிராபி சையது முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
இந்நிலையில் தான் தடைகளைத் தகர்த்து கிரிக்கெட் சாதனைப் படைக்க நினைத்த அஸ்வனி குமாரை கடந்த 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்தை கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

அந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதேபோல இந்த சீசனிலும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் ஒரு சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.!




















