திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால ...
IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்
2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது.

ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார்.
இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், தோனி குறித்து பேசியிருக்கிறார்.
தோனி குறித்து பேசிய சாம்சன், "நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன்.
அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே தோனிதான். தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்" என்று நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.
















