செய்திகள் :

Iran: போர் நிறுத்தத்தை மீறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா, ஈரான்; என்ன தான் சொல்கிறார்கள்?

post image

'போர் விரைவில் முடிந்துவிடும்... பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்று மீண்டும் கூறத் தொடங்கியிருக்கிறார்.

அமெரிக்க ராணுவப் படை, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது அவ்வப்போது ஈரான் நடத்தும் தாக்குதல்களால் அமெரிக்காவும் 'தற்காப்புத் தாக்குதலை' தொடர்ந்து நடத்தி வருகிறது.

அமெரிக்கா
அமெரிக்கா

ஈரானும் தன் பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகள் மீது கடுமையான தாக்குதலை மீண்டும் நடத்துகிறது.

அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் பதிவில், "அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகப் படைகள் ஈரானில் உள்ள பல இலக்குகளுக்கு எதிராகக் கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின.

ஈரானின் அநியாயமான மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவப் படை கூறுவதென்னவோ, "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் பயங்கரவாத அமெரிக்க ராணுவம் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் நடத்தின.

அதற்கு பதிலடியாக, இஸ்லாமிய குடியரசு ஈரான் ராணுவம் பல்வேறு வகையான அழிவுகரமான ட்ரோன்களைப் பயன்படுத்தி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைப் பிரிவைக் (US Fifth Fleet) குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று சொல்கிறது.

ஆக, இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டி போர் நிறுத்தத்தைத் தாண்டி, தாக்குதலைத் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா

ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது. ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக... மேலும் பார்க்க