செய்திகள் :

Keralam: மூழ்கிய கப்பலில் கால்சியம் கார்பைடு; கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; நீதிமன்றம் கவலை

post image

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது.

கப்பல் சாய்ந்த நிலையில் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் கப்பல் மூழ்கியது. எம்.எஸ்.சி எல்சா 3 கப்பல் விபத்தால் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கின. மேலும் கடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இப்போதும் ஆழ்கடலில் கன்டெய்னர்கள் மூழ்கிக்கிடக்கின்றன.

இந்தக் கப்பலில் மொத்தம் 643 கன்டெய்னர்கள் இருந்த நிலையில், இதுவரை வெறும் 72 கன்டெய்னர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கன்டெய்னர்கள் அனைத்தும் இன்னும் கடலின் அடிப்பகுதியிலும், மூழ்கிய கப்பலுக்குள்ளேயும் தான் உள்ளன. மூழ்கிய கப்பலில் 339.2 டன் கால்சியம் கார்பைடு உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பருவமழைக் காலத்தில் கடல் சீற்றம் அல்லது வலுவான நீரோட்டங்கள் காரணமாக இவைச் சிதைந்து கரை ஒதுங்கினால், கடலோரப் பகுதிகளில் பெரும் சேதமும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுமட்டுமன்றி பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய 70 கன்டெய்னர்களும் பருவமழை தீவிரமடையும்போது உடைந்து கடலில் பரவும் பேராபத்தும் நிலவுகிறது.

கேரள உயர்நீதிமன்றம்!

கப்பல் மூழ்கிய வழக்கு குறித்து கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது. ​தற்போது இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு தரப்பாகச் சேர்த்துள்ளது.

இந்த விபத்தின் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூட்டு ஆய்வு நடத்துவதற்காக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி அறிக்கை ஜூலை மாத இறுதியில் கிடைக்கும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கப்பலில் இருந்த டன் கணக்கிலான எண்ணெய் அகற்றப்பட்டுவிட்டதாகக் கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.

அதேசமயம் அந்த நடவடிக்கை எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமாகச் செய்யப்பட்டது என்பதை நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கொச்சி கப்பல் விபத்து

கப்பல் விபத்தைத் தொடர்ந்து இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை வரும் ஜூன் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கப்பல் விபத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இந்தச் சூழலில், மூழ்கிய கப்பலில் உள்ள கால்சியம் கார்பைடு உள்ளிட்ட வீரியமிக்க பொருட்கள் கடலோர மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்

ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்த... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பி... மேலும் பார்க்க