செய்திகள் :

Kumbh Mela: ``இது தெய்வீக இணைப்பின் தருணம்..'' -கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அதோடு, உலக தலைவர்கள் கும்பமேளாவிற்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.

கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கும்பமேளாவிற்கு குடும்பத்தோடு வந்து புனித நீராடினார். இன்று பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளாவிற்கு வந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கங்கை ஆற்றில் படகில் சென்று பார்வையிட்டார்.

படகு சவாரி

அவர் படகில் சென்றபோது கரையில் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதமரை நோக்கி கையசைத்தனர். அவர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடியும் உற்சாகமாக கையசைத்தார். படகில் திரிவேணி சங்கமத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி காவி சட்டை அணிந்து திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினார்.

பாதுகாப்பான முறையில் அங்கு கட்டப்பட்டு இருந்த கயிற்றை பிடித்துக்கொண்ட மற்றொரு கையில் ருத்ராட்ச மாலையுடன் மந்திரங்களை ஓதியபடி பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். அதோடு சூரியனையும், கங்கை, யமுனை, சரஸ்வதியையும் வழிபட்டார். கரையில் இருந்து புரோகிதர்கள் மைக் மூலம் மந்திரங்களை உச்சரித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைக்காண ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இதையடுத்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள அனுமான் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், கும்பமேளாவில் கலந்து கொண்டதற்காக தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக குறிப்பிட்டார்.

கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

இது தெய்வீக இணைப்பின் ஒரு தருணம், இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மற்றவர்களைப் போலவே, நானும் பக்தி உணர்வால் நிரப்பப்பட்டேன். கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் பிரயக்ராஜ் நகரில் 5500 கோடி மதிப்புள்ள 167 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று கும்பமேளாவிற்கு வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,'' டெல்லி சட்டமன்ற ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்கவேண்டும்''என்று குறிப்பிட்டு இருந்தார்.

Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என்பது உண்மையா?

Doctor Vikatan:மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே நிவாரணம் தெரியும் என்கிறார்களே... இது உண்மையா? மலச்சிக்கலுக்கான மாத்திரைகள் அடிக்ஷனாக மாற வாய்ப்புண்டா? அப்போது உ... மேலும் பார்க்க

காலநிலை மாற்றம்; நகர வளர்ச்சி... எலிகளுக்கு கொண்டாட்டம்!

மழை, வெள்ளம், பனி உருகுதல் எல்லாம் காலநிலை மாற்றத்தோட விளைவுகள்னு தெரியும். இப்போ அதுல எலிகளின் பெருக்கமும் சேர்ந்துடுச்சு. உலகம் சூடாகுறதால நகரங்களில் எலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிட்டு வருதாம். நகர... மேலும் பார்க்க

`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பி... மேலும் பார்க்க

36,000 மலர்ச் செடிகள்; காய், கனிகள்... புதுச்சேரி அரசின் மலர் கண்காட்சி.. குவியும் பார்வையாளர்கள்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா 2025 மற்றும் 35-வது காய்கறி, கனி, மலர் கண்காட்சி துவக்க விழா ... மேலும் பார்க்க

``பாலியல் வீடியோக்களால்தான் இப்படி நடக்குது..'' -திருமாவளவன் சொல்வதென்ன?

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில... மேலும் பார்க்க

அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில... மேலும் பார்க்க