செய்திகள் :

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

post image

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற உபெர் நிறுவனம் தன்னிடம் வேலைக்குச் சேர்ந்த ஒரு புதிய ஊழியருக்கு விலையுயர்ந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப்பை அன்பளிப்பாக வழங்கியது. ஆனால், அந்த லேப்டாப் கைக்குக் கிடைத்த அடுத்த நிமிடமே, அவர் தனது போன் நம்பர், சமூக வலைதளப் பக்கங்கள் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு லேப்டாப்புடன் காணாமல் போயுள்ளார்.

வேலைக்குச் சேர வேண்டிய நாளில் அந்த நபர் வராததால், நிறுவன அதிகாரிகள் அவரது மொபைல் போனுக்குத் தொடர்பு கொண்டனர். அப்போது, "இந்த எண் புழக்கத்தில் இல்லை" என்ற பதில் வந்துள்ளது.

அவர் நிறுவனத்தின் போன் நம்பரை மட்டும் பிளாக் செய்யவில்லை, மாறாகத் தனது சிம் கார்டையே முற்றிலுமாக முடக்கியுள்ளார். தொடர்ந்து அவரது தொழில்முறை சமூக வலைதளப் பக்கத்தைச் சரிபார்த்தபோது, அதுவும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுத் தடயமே இல்லாமல் போயிருந்தது அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த லேப்டாப் அனுப்பி வைக்கப்பட்ட முகவரியைச் சோதித்துப் பார்த்தபோது, அது ஒரு பாழடைந்த கட்டடத்திற்குப் பின்னால் இருந்த வெற்று நிலம் என்பது தெரியவந்தது. அதாவது, லேப்டாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஒரு திட்டமிட்ட போலி முகவரியை அவர் கொடுத்துள்ளார்.

உடனடியாக நிறுவனத்தின் கணினிப் பிரிவினர் அந்த லேப்டாப் எங்குள்ளது என்று கண்டுபிடிக்க முயன்றபோது, அந்த லேப்டாப் ஏற்கெனவே முற்றிலும் அழிக்கப்பட்டு, கண்டுபிடிக்க முடியாத ஒரு போலி இடத்தில் இயங்குவது போலக் காட்டியுள்ளது.

AI

கடினமான நேர்காணல் தேர்வுகள் அனைத்தையும் கடந்து, பின்னணி சோதனைகளையும் போலி அடையாளங்களை வைத்து ஏமாற்றி, லேப்டாப்பிற்காக இவ்வளவு பெரிய திட்டத்தைப் போட்டு அந்த நபர் திருடியிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து வேடிக்கையாகப் பதிவிட்டுள்ள அந்த நிறுவன அதிகாரி, "அவர் வேலைக்கு வராமல் ஏமாற்றவில்லை, தனது அடையாளத்தையே போலி என நிரூபித்துவிட்டுத் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டார்; இது ஒரு சினிமா பட பாணியிலான திருட்டுச் சம்பவம், தயவுசெய்து எங்களது லேப்டாப்பைத் திருப்பித் தந்துடுங்கள்" என்று புலம்பியுள்ளார்.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க