செய்திகள் :

MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டகாசம்!

post image

இப்போதெல்லாம் நம்ம ஊரில் சந்து பொந்து, இண்டு இடுக்கிலெல்லாம் டிராஃபிக் போலீசார் ஸ்வைப் மிஷினுடன் நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்

ஆனால், சாலையில் நடந்து சென்றவர் ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நம் ஊரில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில்.

மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியான சுஷில்குமார் சுக்லா, தன் வீட்டு நிகழ்ச்சிக்கு வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து வரப் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குச் சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் சுக்லாவை நிறுத்தி "ஹெல்மெட் ஏன் போடவில்லை?" என்று கேட்க, "நடந்து செல்வதற்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். அதைப் பற்றி கவலைப்படாமல், அதட்டலாக 300 ரூபாய் அபராதம் செலுத்தக் கூறியுள்ளனர். முடியாது என்ற சுக்லாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஹெல்மெட்
ஹெல்மெட்

வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்லவேண்டும், விட்டு விடுங்கள் என்று அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். அதன் பின்பு இரக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் ஒன்றின் பதிவு எண்ணில் சுக்லா பெயரில் ஹெல்மெட் வழக்குப்பதிவு செய்து 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

இதனால் மனம் நொந்துபோன சுக்லா, ஊரிலுள்ள உறவினர்களிடம் தனக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். அதோடு பன்னா மாவட்ட எஸ்.பி-யிடம்  புகாராகக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த எஸ்.பி, தற்போது சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் முழுவதும் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க

சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர... மேலும் பார்க்க

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க

கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!

டெல்லி மற்றும் நொய்டாவில் அடிக்கடி வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அல்லது லிப்டில் ஏறுவது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் செக்யூரிட்டி கார்டுகளை தாக்குவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. டெல்லி அருகில் ... மேலும் பார்க்க

`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை

பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி மறைத்த நிர்வாகம்?

புதுச்சேரியில் அத்துமீறல் சம்பவம்சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒட்டுமொத்த தமி... மேலும் பார்க்க