செய்திகள் :

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

post image

நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.

புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.

ஆனால், புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையில், 'பதிவான நில அதிர்வுகள் நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை, மாறாக அது ஒரு பனிப்பாறை சரிவு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவு. நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை' என்று உறுதிப்படுத்தியது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS)

தற்போது பிளானட் லேப்ஸ் (Planet Labs) செயற்கைக்கோள் படங்களின் முதற்கட்ட ஆய்வில், நேபாள-சீன ரசுவாகதி எல்லைக்கு வடகிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள லெண்டே நதியில் பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததே இந்த பேரழிவிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த பனிப்பாறை சரிவின் தாக்கம், 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து நேபாளத்திற்குள் பாயும் போதே கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டே நதியில் ஏற்பட்ட இந்த சரிவைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 341 வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 403 சுற்றுலாப் பயணிகள் பேரழிவிற்குப் பிறகு பல மணிநேரமாகக் காணவில்லை என்று சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது. காணாமல் போன வெளிநாட்டினரில் 142 இந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவாகதி, தாதிங் (Dhading) மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திபெத்தின் கிய்ரோங் பகுதியில் 265 பேரைக் காணவில்லை என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நேபாள-திபெத் எல்லையின் திபெத்தியப் பகுதியில் பதிவான பாதுகாப்பு கேமரா காட்சிகளில், சேறு, பாறைகள் மற்றும் நீர் ஆகியவற்றின் பெருவெள்ளம் கட்டிடங்களையும் வாகனங்களையும் அடித்துச் செல்வதற்கு முன்பு, பலர் அலறியடித்து ஓடும் கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

Nepal Flood
Nepal Flood

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் பலேந்திர ஷா, அரசின் அனைத்து வளங்களும் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளவர்களைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

நுவாகோட் மற்றும் தாதிங் பகுதிகளில் உள்ள நேபாள இராணுவ பயிற்சி மையத்திற்கு வெளியே, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அறிய மக்கள் சோகத்துடன் கூடி நிற்கின்றனர். நீர்மின் உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் மொபைல் போன் வெளிச்சத்தில் காணாமல் போனவர்களின் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவி... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video

This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even ... மேலும் பார்க்க

Rain Alert: இடி, மின்னலுடன் மழை; 15 மாவட்டங்களுக்கு காலை வரை அலர்ட்; சென்னைக்கு என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ... மேலும் பார்க்க

ஊட்டி: எல்-நினோ தாக்கம்; தரை தட்டிய அணைக்கட்டுகள் - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்!

எல்- நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளுக்கு இணையாக நீலகிரியின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அ... மேலும் பார்க்க

கேரளம்: கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி - சபரிமலைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உறங்கிக்கொண்டிர... மேலும் பார்க்க