செய்திகள் :

PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!

post image

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன.

அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது…

நாளை முதல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ், நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாணப் பத்திரம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதுவரை ஆதார் கார்டு மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்றிருந்தது.

ஆதார் - பான் கார்டு
ஆதார் - பான் கார்டு

ஆதாரும், பான் கார்டும் ஒன்றுபோல…

இனி புதிதாக வழங்கப்படும் பான் கார்டுகளில் உள்ள தகவல்கள், ஆதார் கார்டில் உள்ளது போலவே இருக்கும்.

ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆதார் தகவலுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அதை சரிசெய்ய அரசாங்கம் புதிதாக விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

வேறு என்னென்ன மாற்றங்கள்?

  • ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால் மட்டும் பான் கார்டு காட்டினால் போதும்.

  • நாளை முதல், புதிதாக வாங்கும் வாகனங்களின் விலை ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டும் பான் கார்டு தேவை.

  • அதிக மதிப்புள்ள இரு சக்கர வாகனங்களுக்கு பான் கார்டு அவசியம்.

  • ஆனால், டிராக்டர் வாங்கும்போது, பான் கார்டு காட்ட வேண்டும் என்பதில்லை.

ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட்
  • புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்கு கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் மட்டும் பான் கார்டு தேவை.

  • ரியல் எஸ்டேட் துறையில், ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாக பெற்றாலோ, பான் கார்டு காட்ட வேண்டும்.

  • அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு தேவை.

'இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு' - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?

நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.95-ஐ தாண்டியது. இந்திய ரூபாயின் மதிப்பு இந்தளவுக்கு வீழ்ச்சியடைவது இதுவே முதன்முறை. இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடு... மேலும் பார்க்க

'VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காத திருமா... பின்னணி என்ன?'

'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்ப்பு வழங்காதது ஏன்?' என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க

`தூக்கு தண்டணையா... ஆயுள் தண்டணையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தா... மேலும் பார்க்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் ... மேலும் பார்க்க

போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!' - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவ... மேலும் பார்க்க

"சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது" - விஜய்யை விமர்சிக்கும் கருணாஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறார். 234 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது தவெக. பெரம்பூர், திருச... மேலும் பார்க்க