செய்திகள் :

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

post image

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.

குடும்பத்தினருடன் பத்மா
குடும்பத்தினருடன் பத்மா

ரஜினிகாந்தை பார்த்த மகிழ்ச்சி விலகாமல் இருந்த பத்மாவை தொடர்புகொண்டு பேசினேன். 'எங்கிட்ட போன் கிடையாது. என் வீட்டுக்காரர் மட்டும்தான் போன் வச்சிருக்காரு. ரஜினி சார் சைடுல இருந்து நேத்து கூப்பிட்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க.

சாயங்காலம் வீட்டுக்கு வந்த உடனேயே 'தலைவர் உன்னைய பார்த்து பாராட்டணும்னு சொல்றாராம். நாளைக்கு போறோம்'னு சொன்னவுடனேயே பயங்கர சந்தோஷமாகிடுச்சு. நைட்டெல்லாம் தூக்கமே வரல. நாம படிக்காதவங்க, அவரை பார்த்து எப்படி கௌரவமா பேசுறதுன்னு ஒரே குழப்பம். அத்தோடதான் குடும்பமா காலையில கிளம்பி போயஸ்கார்டன் போனோம்.

பத்மா
பத்மா

சும்மா பாராட்டுவாரு, தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன். ஆனா, போன உடனேயே என்னையை அரவணைச்சு தோள்ல தட்டிக் கொடுத்து பாராட்டுனாரு. அதுலயே நெகிழ்ந்துட்டேன். 'நீங்க செஞ்சது ஒரு சேவை. எல்லாரும் உங்களை மாதிரியே நல்ல மனசோட இருக்கணும். இந்தப் புண்ணியம்லாம் உங்க பேரப் புள்ளைங்களுக்கு பெரிய சந்தோஷமா திரும்ப கிடைக்கும்'னு மனப்பூர்வமா வாழ்த்துனாரு. ரெண்டு பேத்திகளையும் கட்டிப்பிடிச்சு கொஞ்சி போட்டோ எடுத்துக்கிட்டாரு. என் வீட்டுக்காரரும் அவங்க அண்ணனும் அவரோட தீவிர ரசிகருங்க. அவங்க கிட்டயும் உட்காந்து பேசுனாரு. 'நீங்கெல்லாம் முன்னுதாரணமானவங்க'னு சொல்லி ஒரு செயினையும் பரிசா கொடுத்தாரு. அவரோட எவ்வளவோ படங்களை பார்த்து ரசிச்சிருக்கோம். அவரே கூப்பிட்டு பாராட்டுறதுலாம் நடக்கும்னு என்னைக்கும் நினைச்சதில்ல. அது நடந்ததுல ரொம்ப சந்தோஷம்' என்றார்.

"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக்கொண்டிருந்தபோது 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றைக் கண்டெடுத்தார். அடுத்த ஒரு மணி நே... மேலும் பார்க்க

அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதி - வழங்கினார் ரமேஷ் ஸ்ரீநிவாசன், CEO, Agilysys Inc.,USA

'அக்ஷயம் 365' என்பது 'MUDRA OOH' நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி ஆகும். இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இ... மேலும் பார்க்க

மோமோ சாப்பிட ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுத்த சிறுவன்; அதிர்ந்த பெற்றோர்... என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருப்பவர் விம்லேஷ் மிஸ்ரா. இவர் அங்குள்ள தியோரியா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு ம... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பசுவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய தகவல்; கடைகள், வீடுகளுக்குத் தீ வைப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தம்ஜிபுரா என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ... மேலும் பார்க்க

`குடும்பத்தோடு இருக்க பணம் கொடுக்க வேண்டும்' - 89 வயதில் மும்பை ரயிலில் நெக்லஸ் விற்கும் மூதாட்டி

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் ஏறி இறங்குவது என்பது மிகவும் சவாலான காரியம். சில பயணிகள் தாங்கள் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தில் இறங்க முடியாமல் அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும... மேலும் பார்க்க