செய்திகள் :

Tiger death: கூடலூரில் மேலும் ஒரு புலியின் சடலம் கண்டெடுப்பு; தீவிர விசாரணையில் வனத்துறை

post image

உலக அளவில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் வனப்பகுதியாக நீலகிரி பல்லுயிர் வள மண்டலம் விளங்கி வருகிறது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள தனியார் தேயிலை, காப்பி தோட்டங்களிலும் புலிகளின் நடமாட்டம் தென்பட்டு வருகின்றன. வயநாடு போன்ற பகுதிகளில் புலிகளின் மர்ம இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

புலி இறப்பு
புலி இறப்பு

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை வனச்சரகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்து, மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெலாக்கோட்டை பகுதியில் இன்று (மார்ச் 6) காலை மேலும் ஒரு புலி இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். பாலினம், வயது, இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெலக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை

மான்களை வேட்டையாட, புலியோ, சிறுத்தையோ, செந்நாய்களோ, நரிகளோ, கழுதைப்புலிகளோ தூரத்தில் வரும்போதே, மரங்களின் மீது உட்கார்ந்திருக்கிற மயில்கள் அகவல் செய்து மான்களை எச்சரித்து விடுமாம். மயில்கள் ஏன் மான்கள... மேலும் பார்க்க

Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ - ஏன் தெரியுமா?

`உங்கள் முன்னாள் காதலியின் பெயரை ஓநாய்க்கு வீசப்படும் இரைகளுக்கு நீங்கள் வைப்பீர்களா?’... என்ன கேள்வி இது என்று தோன்றும். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் இவ்வாறு ச... மேலும் பார்க்க

பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது தெரியுமா? - ஆச்சர்யப் பின்னணி

பாம்பு தனது தோலை உரிக்கும் போது அவற்றைப் பார்த்தால் கொத்துமென்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? எதற்காக இவ்வாறு பாம்பு தன் தோலை உரித்துக் கொள்கின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.மனிதர்களி... மேலும் பார்க்க

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேர... மேலும் பார்க்க

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டி: ஈரோட்டில் பார்வையாளர்களை கவர்ந்த காளைகள்!

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்க... மேலும் பார்க்க