செய்திகள் :

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' - முழு விவரம்!

post image

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

CM Vijay
CM Vijay

முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், 'கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000 க்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் கொள்முதல் விலையை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்தோம்.

தவிடு, புண்ணாக்கு போன்ற இடுபொருட்களின் விலையை உயர்வை சுட்டிக்காட்டி கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து மேலும் 3 ரூபாயை உயர்த்தி வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

CM Vijay
CM Vijay

15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும்.

ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும்.

தூத்துக்குடியில் 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1600 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.

175 கோடி ரூபாய் செலவில் செமி கண்டக்டர் உற்பத்தி பூங்கா சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் 2000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

400 கோடி ரூபாய் செலவில் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்.

திருச்சியில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும்.' என்றார்.

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார். சபாநாயகர்திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசு... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் ... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அ... மேலும் பார்க்க

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க