செய்திகள் :

TNRERA கலைப்பு: 6 மாதங்களுக்கு இடைக்கால நிர்வாகம்! - வீடு வாங்குபவர்களுக்கு பாதிப்பு இருக்குமா?

post image

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான `TNRERA' அமைப்பை தமிழக அரசு உடனடியாக கலைத்து, அதன் அதிகாரங்களை மேற்கொள்ள இடைக்காலமாக மூன்று பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்பாடு 6 மாதங்களுக்கு அல்லது புதிய ஆணையம் அமைக்கப்படும் வரை அமலில் இருக்கும்.

இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏன் TNRERA கலைக்கப்பட்டது?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகியதால், ஆணையம் சட்டப்படி செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகியவர்கள்:

* தலைவர்: சிவ் தாஸ் மீனா, ஐஏஎஸ் (ஓய்வு)

* உறுப்பினர்: டாக்டர் எல். சுப்ரமணியன்

* உறுப்பினர்: சுகுமார் சிட்டிபாபு

* உறுப்பினர்: எம். கிருஷ்ணமூர்த்தி

* உறுப்பினர்: டாக்டர் டி. ஜெகந்நாதன்

இந்த சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016-ன் பிரிவு 82-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, TNRERA-வை தற்காலிகமாக கலைக்க அரசு முடிவு செய்துள்ளது.

வீடு

புதிய 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு

புதிய நிரந்தர ஆணையம் அமைக்கப்படும் வரை, TNRERA-வின் அனைத்து அதிகாரங்களையும் பொறுப்புகளையும் மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதில்,

* தலைவர்: கே. பனிந்திர ரெட்டி, ஐஏஎஸ் (ஓய்வு)

* உறுப்பினர்: ஏ. நசீர் அகமது, மாவட்ட நீதிபதி (ஓய்வு)

* உறுப்பினர்: ரீட்டா ஹரிஷ் தக்கர், ஐஏஎஸ் (ஓய்வு)

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு 6 மாதங்களுக்கு அல்லது புதிய TNRERA ஆணையம் அமைக்கப்படும் வரை, எது முன்னதாக நிகழ்கிறதோ அதுவரை செயல்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வாங்குபவர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்குமா?

TNRERA கலைக்கப்பட்டாலும், அதன் சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் திட்டங்களின் பதிவு, வீடு வாங்குபவர்களின் புகார்கள், விசாரணைகள், தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.!

நலங்கிள்ளியின் ’ஆர்எஸ்எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்' நூலுக்கு தடை விதிக்க கோரிக்கை – காரணம் என்ன?

கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ’ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன... மேலும் பார்க்க

``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந... மேலும் பார்க்க

மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறா... மேலும் பார்க்க

'ஆபரேஷன் Toofan' - தமிழக முதல்வரை திடீரென சந்திக்கும் கேரள உள்துறை அமைச்சர்! - பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக 'ஆபரேஷன் Toofan' இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன்... மேலும் பார்க்க