செய்திகள் :

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் - வெளியான அறிவிப்பு!

post image

84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வரை) அனைத்து வகை உணவகங்கள், பேக்கரிகள், கஃபேக்கள் மற்றும் QSR-களை பிரதிநிதித்துவப்படுத்தி, தென் இந்தியாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் துறைக்கான மிகப்பெரிய B2B வணிக தளமான UNAVU EXPO 2026-ஐஅறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FHRAI) மற்றும் தென் இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA) ஆகியவற்றின் ஆதரவுடன், சென்னை நகரில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரு. M. வெங்கடசுப்பு, தலைவர்; திரு. D. சீனிவாசன் – கௌரவ தலைவர்; திரு. M. ரவி – கௌரவ தலைவர்; திரு. K. T. சீனிவாச ராஜா – கௌரவ தலைவர்; திரு. R. சீனிவாசன் – செயலாளர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்; மற்றும் திரு. பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் – இயக்குநர், Synergy Exposures & Events India Pvt. Ltd. ஆகியோர் கலந்து கொண்டனர்.

UNAVU EXPO 2026

2026 அக்டோபர் 1 முதல் 3 வரை சென்னை வர்த்தக மையம் (Chennai Trade Centre) வளாகத்தில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. மேலும் இந்தியா முழுவதும் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாள் B2B வணிக நிகழ்வான இந்த UNAVU EXPO 2026-ல் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், கஃபேக்கள் உள்ளிட்ட துறைகளின் பங்குதாரர்கள் ஒன்று கூடி தொழில் போக்குகள், கொள்கைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

உணவகத் துறையின் முன்னோடியான டாக்டர் K. தாமோதரசுவாமி நாயுடு அவர்கள், தனது தொலைநோக்கு பார்வையால் தமிழக உணவகத் துறையை மாற்றியமைத்தவர். ஸ்ரீ அன்னபூர்ணா – ஸ்ரீ கவுரிசங்கர் பிராண்டை உருவாக்கி தரம் மற்றும் சுத்தத்தில் புதிய அளவுகோல்கள் அமைத்தார். பல புதுமைகளை அறிமுகப்படுத்திய அவரை நினைவுகூர்ந்து, UNAVU EXPO 2026-இல் அக்டோபர் 3 ஆம் தேதி “உணவக தினம்” (Unavaga Dhinam) ஆகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு

மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.​மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 5... மேலும் பார்க்க

அதிநவீன ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை! - வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திய சென்னை அபோல்லோ

அபோல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் அபோல்லோ ஸ்பைன் கிளினிக், தேனாம்பேட்டை, கடுமையான இளம்வயது காரணமறியாத ஸ்கோலியோசிஸால் பாதிக்கப்பட்ட 15 வயது சர்வதேச நோயாளிக்கு சிக்கலான ரோபோட்டிக் உதவியுடன் மு... மேலும் பார்க்க

சென்னை: `நகை உலகம் இதுவரை கண்டிராத பிரமாண்டம்'- புதிதாக திறக்கப்பட்டுள்ள லலிதா ஜுவல்லரி 63 வது கிளை!

லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் 63 வது கிளை சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் இன்று திறக்கப்பட்டது. நகை உலகம் இதுவரை கண்டிராத வகையில் மிக மிகப் பிரத்தியேகமான நகை ரகங்களை இந்த புதிய கிளையில் அறி... மேலும் பார்க்க

உலகளாவிய பதற்றத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு தரும் சிறப்பு கருத்தரங்கம்!

மக்கள் தங்களின் செல்வத்தைப் பாதுகாக்கவும், திட்டமிட்டு வளர்க்கவும், வருங்கால நிதி இலக்குகளை எட்டவும் துணை நிற்பதில் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.அந்த வகையில் கடந்த 20 ... மேலும் பார்க்க

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் வழங்கும், தமிழ் புத்தாண்டு & அட்சய திருதியை பிரத்யேக சிறப்பு சலுகைகள்!

1964-ஆம் ஆண்டு முதல் தென் இந்தியாவின் நகைத்துறையில் நம்பிக்கைக்குரிய பெயராகத் திகழும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், மரபு, கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை என்ற தனது பாரம்பர்யத்தை இன்றும் தொடர்ந்த... மேலும் பார்க்க