செய்திகள் :

US-Israel Attacks Iran: "ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது" - என்ன சொல்கிறது அமெரிக்கா?

post image

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.

அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒரே நேரத்தில் 'ஆபரேஷன் எபிக் ப்யூரி' என்ற பெயரில் ஈரான் மீது வான்வெளித்தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து துபாய், அபுதாபி, இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரோடு அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரானும் உறுதிபடுத்தியிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் நிர்வாகம் முயற்சித்தது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த கால நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ஈரானியத் தலைமை இப்போது தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிக்கிறார்கள். இப்போது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

தங்களது தலைவரின் மரணத்திற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அதோடு புதிதாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.

இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், ''ஈரான் இன்று மிகவும் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது. இதுவரை தாக்கப்பட்டதை விடவும் கடுமையாகத் தாக்குவோம் என்று கூறி இருக்கிறது.

அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, எப்படியிருந்தாலும், அவர்கள் செய்தால், இதுவரை கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் கடந்த ஜனவரி 28ம் தேதி காலை பாராமதி விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர... மேலும் பார்க்க

மகனுக்கு எம்.பி பதவி; மனைவிக்கு தலைவர் பதவி - அஜித் பவார் மனைவி தேசியவாத காங்கிரஸ் தலைவராகிறார்!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் கடந்த மாத இறுதியில் புனே அருகில் உள்ள பாராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து அவர் வ... மேலும் பார்க்க

பொறியாளருக்கு 7 லட்சம்; மூத்த துப்புரவு தொழிலாளிக்கு ரூ.2 லட்சம்! - தெலங்கானா அரசு அறிவிப்பு

தெலங்கானா அரசு சமீபத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. தெலங்கானாவின் மின் துறையில் மூத்த பொறியாளராக இருக்கும் நபருக்கு மாதம் ரூ.7 லட்சம் சம்பளமாக வழங்கப்பட... மேலும் பார்க்க

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப ... மேலும் பார்க்க

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம... மேலும் பார்க்க

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க