செய்திகள் :

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

post image

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Yogesh Gowda - BJP
Yogesh Gowda - BJP

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, தார்வாடு பகுதியின் பாஜக உறுப்பினரான யோகேஷ் கவுடா, அங்குள்ள தனது உடற்பயிற்சிக் கூடத்தில் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

அப்போது மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த வினய் குல்கர்னிக்கும் இந்தக் கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

முதலில் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, கடந்த 2019-ம் ஆண்டில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ தனது விசாரணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வினய் குல்கர்னிதான் இந்தக் கொலைக்குக் காரணமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து, 2020-ல் அவரைக் கைது செய்தது. பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

Congress MLA Vinay Kulkarni
Congress MLA Vinay Kulkarni

இந்த வழக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த புதன்கிழமை நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்தார்.

சிபிஐ தரப்பில், குற்றவாளிகளுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமண ஏற்பாடு; நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மகள் சிரிஷா (19). இவர் திருப்பதியில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு படிப்பை பாத... மேலும் பார்க்க